காரைக்குடி அருகேயுள்ள கம்பனூரை சேர்ந்த 47 வயது பெண் கருப்பு பூஞ்சை அறிகுறியுடன் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவர் சிகிச்சை பலனின்றி பலியானார். இது குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலமுருகன் கூறுகையில், கருப்பு பூஞ்சை அறிகுறியுடன் அப்பெண் அனுமதிக்கப்பட்டார். சி.டி.ஸ்கேன் எடுப்பதற்குள் அவர் இறந்து விட்டார் என்றார். சிவகங்கையில் இதுவரை கருப்பு பூஞ்சைக்கு 2 பேர் பலியாகியுள்ளனர்.