தவறி விழுந்து முதியவர் பலி

காரைக்குடியில் பெயிண்ட் அடிக்கும் போது தவறி கீழே விழுந்து முதியவர் பலியானார்.

Update: 2021-07-02 18:30 GMT
காரைக்குடி,

காரைக்குடி திருவள்ளுவர் திருநகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 60).இவர் தனது வீட்டின் போர்டிகோ மேலே ஏறி பெயிண்ட் அடித்துக்கொண்டு இருந்தார்.அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த அடிபட்ட அவரை அவரது குடும்பத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே ராமச்சந்திரன் உயிரிழந்தார். இதுகுறித்து காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்