வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது
வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சாயல்குடி,
சாயல்குடி அருகே கொண்டு நல்லான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் மகன் வினித் (வயது21) உள்பட 3 பேர் இலந்தைகுளம் சாலையில் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் சாயல்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து வினித் உள்பட 2 பேரை கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடிவருகின்றனர்.