1,116 பேருக்கு கொரோனா தடுப்பூசி

அருப்புக்கோட்டையில் நடைபெற்ற முகாமில் 1,116 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

Update: 2021-07-02 19:35 GMT
அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டையில் தற்போது கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நகர்ப்பகுதிகளில் வெள்ளைக்கோட்டை சாலியர் பள்ளியிலும், திருச்சுழி ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்திலும் நகராட்சி சுகாதார துறை சார்பில் 18 வயது முதல் 45 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமை நகராட்சி ஆணையாளர் முகமது சாகுல்ஹமீது தொடங்கி வைத்தார். இந்த முகாமில் மொத்தம் 1,116 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் சரவணன், ராஜபாண்டியன் கூறினர்.

மேலும் செய்திகள்