செல்போன் திருடியவர் கைது

செல்போன் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-07-02 19:44 GMT
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அர்ச்சுணன்(வயது 44). இவர் தனது செல்போன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொலைந்து விட்டதாக ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் ஜெயங்கொண்டத்தில் பஸ் நிறுத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் செல்போனில் பேசியபடி வந்த ஒருவரை, போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். மேலும் அவரிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து போலீசார், அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தியதில், அவர் மேலகோவிந்தபுத்தூர் கிராமம் நடுத்தெருவைச் சேர்ந்த மணிகண்டன்(45) என்பதும், ெசல்போன் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்து அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்