மணல் கடத்திய லாரி பறிமுதல்

மணல் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-07-02 20:12 GMT
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திரு வெங்கனூர் கிராமத்தில் திருமானூர் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்நாதன் தலைமையிலான போலீசார், கொள்ளிடக்கரை பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கொள்ளிடம் ஆற்றில் இருந்து ஒரு லாரி வந்தது. போலீசாரை பார்த்ததும் லாரியை நிறுத்திய டிரைவர், லாரியை அங்கேயே விட்டுவிட்டு கீழே குதித்து தப்பித்து ஓடிவிட்டார். இதையடுத்து போலீசார் லாரியை சோதனை செய்தபோது, அதில் மணல் கடத்திய வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்