16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் - பெரியப்பா மகனுக்கு வலைவீச்சு

சாகர் அருகே 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பெரியப்பா மகனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2021-07-02 20:20 GMT
சிவமொக்கா:

சிறுமி பலாத்காரம்

  சிவமொக்கா டவுன் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவள் தற்போது தனது தாய், தந்தையுடன் சிவமொக்கா மாவட்டம் சாகரில் உறவினர் வீட்டில் தங்கியிருந்து வந்தாள். இந்த நிலையில் சாகர் அருகே உள்ள உல்லத்தி கிராமத்தில் வசித்து வரும் பெரியப்பா வீட்டுக்கு சிறுமி அடிக்கடி சென்று வந்துள்ளார்.

  அவ்வாறு வரும் சிறுமியை, பெரியப்பா மகனான 23 வயது வாலிபர் ஆசை வார்த்தைகள் கூறியும், மிரட்டியும் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதுபற்றி தனது பெற்றோரிடம் கூற முடியாமல் சிறுமி பரிதவித்த வந்தாள்.

வாலிபருக்கு வலைவீச்சு

  இந்த நிலையில் தாவணகெரே மாவட்டம் ஜாகலூரில் நடந்த உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சியில் பங்கேற்க சிறுமி, தனது பெற்றோருடன் சென்றாள். அப்போது உறவுக்கார பெண் ஒருவரிடம், தனது பெரியப்பா மகனால் நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து கூறி கண்ணீர்விட்டு அழுதாள்.

  அதன் பின்னர் அந்த உறவுக்கார பெண் சம்பவம் பற்றி தாவணகெர குழந்தைகள் நலத்துறையினரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் சாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே தங்கையை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்