வாகனம் மோதி விவசாயி சாவு

நெல்லையில் வாகனம் மோதி விவசாயி இறந்தார்.

Update: 2021-07-02 20:25 GMT
நெல்லை:
நாங்குநேரி அருகே பெரும்பத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 42). விவசாயி. இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் வெண்டைக்காய் ஏற்றிக்கொண்டு பாளையங்கோட்டை மார்க்கெட்டுக்கு சென்று கொண்டிருந்தார். ரெட்டியார்பட்டி மேம்பாலம் பகுதியில் சென்றபோது அந்த பகுதியில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் செந்தில்குமார் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயமடைந்த செந்தில்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் நேற்று பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்