திருநங்கைகளுக்கு நிவாரண உதவி; கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. வழங்கினார்.

திருநங்கைகளுக்கு கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. நிவாரண உதவி வழங்கினார்.

Update: 2021-07-02 20:41 GMT
செங்கோட்டை:
செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பவ்டா தொண்டு நிறுவனம் சார்பில் திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பவ்டா நிறுவன தலைவர் டாக்டர் ஜெ.ஜாஸ்லின் தம்பி தலைமை தாங்கினார். துணை பொது மேலாளா் ஆர்தர்ஷாம், முதுநிலை மேலாளா் லவிங்ஸ்டன், விமல் ஆகியோர் முன்னிலை வகித்தனா். மண்டல உள்ளாய்வு மேலாளா் ஹரிஹரன் வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா கலந்து கொண்டு 100-க்கும் மேற்பட்ட திருநங்கைகளுக்கு அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள், சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நகர அவைத்தலைவா் தங்கவேலு, பொருளாளா் ராஜா, நகர துணைச்செயலாளா் பூசைராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில், பவ்டா நிறுவன உதவி பொது மேலாளர் அழகுமுருகன்  நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்