கொரோனாவுக்கு முதியவர் பலி

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதியவர் ஒருவர் பலியானார்.

Update: 2021-07-02 20:43 GMT
திண்டுக்கல்: 

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பும், இறப்பும் குறைந்து வருகிறது. அந்த வகையில் கொரோனா பாதிப்புடன் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வெள்ளோட்டை சேர்ந்த 60 வயது முதியவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். 

இதன் மூலம் கொரோனா இறப்பு எண்ணிக்கை 589 ஆக உயர்ந்தது.
மேலும் பாதிப்பு எண்ணிக்கையும் 50-க்கு கீழ் தான் இருந்தது. அதன்படி 6 பெண்கள் உள்பட மேலும் 39 பேருக்கு நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. 

இதன் மூலம் மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 31 ஆயிரத்து 646 ஆக உயர்ந்தது. 


அதேநேரம் 21 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். நேற்றைய நிலவரப்படி 368 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் செய்திகள்