கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 104 பேர் பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 104 பேர் பாதிக்கப்பட்டனர்.

Update: 2021-07-03 04:00 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றால் 104 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரையில் மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 11 ஆயிரத்து 236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 1 லட்சத்து 8 ஆயிரத்து 634 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

892 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 1,710 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர். நேற்று மாவட்டம் முழுவதும் 2 பேர் இறந்துள்ளனர்.

மேலும் செய்திகள்