திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 161 பேருக்கு கொரோனா

திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 161 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

Update: 2021-07-03 14:45 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று  161 பேர் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். அதுமட்டுமின்றி 2 பேர் உயிரிழந்து உள்ளார். 

நேற்று வரை  49 ஆயிரத்து 861 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனா். இதில் 48 ஆயிரத்து 48 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து உள்ளனர். 

தற்போது 1,209 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 604 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்