சவுடு மண் அள்ளிய வாகனங்கள் பறிமுதல்
சவுடு மண் அள்ளிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பரமக்குடி,
பரமக்குடி அருகே உள்ள உரப்புளி கிராமத்தில் அனுமதியின்றி சவடுமண் அள்ளுவதாக பரமக்குடி தாசில்தார் தமிம் ராஜா விற்கு தகவல் வந்தது. அதன் அடிப்படையில் வருவாய்த்துறை மற்றும் போலீசார் அங்கு சென்றனர். அப்போது அங்கு சவுடு மண் அள்ளிக்கொண்டிருந்த 3 லாரிகள் ஒரு பொக்லைன் எந்தி ரத்தை பறிமுதல் செய்து பரமக்குடி நகர் காவல் நிலை யத் திற்கு கொண்டு வந்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.