முதியவர் தற்கொலை

முத்தையாபுரம் அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-07-03 17:34 GMT
ஸ்பிக்நகர்:
முத்தையாபுரம் அருகே உள்ள அத்திமரப்பட்டி ரோடு பண்ணை நகரை சேர்ந்தவர் கணேசன் (வயது 65). இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலமின்றி இருந்தார். அதற்காக மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு வந்தார். ஆனாலும் நோய் குணமாகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கணேசன் சம்பவத்தன்று வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். 

இதனை பார்த்த அவரது மனைவி சோலையம்மாள் அருகில் உள்ளவர்கள் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு கணேசனை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேட்டைநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்