ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2021-07-03 17:35 GMT
அவினாசி, 
அவினாசி மங்கலம் ரோடு பகுதியில் வசித்து வந்தவர் மன்சூர்அலி (வயது 31). இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்தார். இவருக்கு திருமணமாகி பானா (24) என்ற மனைவியும், 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கொரோனா ஊரடங்கால் ஆட்டோக்கள் ஓடாததால் மன்சூர்அலி  போதிய வருமானம் இல்லாமல் சிரமப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் வீட்டில் தனது அறையில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்