ரெயில்வே தண்டவாளத்தில் பெண் பிணம்

ரெயில்வே தண்டவாளத்தில் பெண் பிணம் கிடந்தார்.

Update: 2021-07-03 18:11 GMT
கரூர்
மாயனூர்-மகாதானபுரம் இடையேயான ரெயில்வே தண்டவாளத்தில் நேற்று காலை அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து கிருஷ்ணராயபுரம் வடக்கு கிராம நிர்வாக அலுவலர் சிவகுமார் கரூர் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசர் வழக்குப்பதிந்து, அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்