மழைநீரால் குளம் நிரம்பியது

மழைநீரால் குளம் நிரம்பியது இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2021-07-03 18:14 GMT
லாலாபேட்டை
கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகே கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வீரியபாளையம் ஊராட்சியில் பச்சமுத்து உடையார் குளம் உள்ளது. இந்தநிலையில் கடும் வறட்சியால் குளம் தண்ணீர் இல்லாமல் காய்ந்து ஆங்காங்கே முட்புதர் வளர்ந்து இருந்தது. இதையடுத்து 100 நாள் வேலை திட்ட பணியாட்கள் மூலம் குளம் சீரமைக்கப்பட்டது. இந்தநிலையில் அப்பகுதியில் கடந்த சில நாட்ளாக பெய்த மழையால் குளம் நிரம்பி உள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்