வாலிபர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு

வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2021-07-03 18:34 GMT
கமுதி, 
கமுதி அருகே பெருமாள்தலைவனேந்தல் கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் செல்வம் (வயது27). இவர் 14 வயது சிறுமியை கடத்தி சென்றுவிட்டு, நேற்று முன்தினம் மதுரையில் சிறுமியின் உறவினர் வீட்டில் விட்டுவிட்டு தப்பிச்சென்று விட்டார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கோவிலாங்குளம் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்