சூதாடிய 4 பேர் கைது

சாத்தூர் பகுதியில் சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-03 18:50 GMT
சாத்தூர், 
சாத்தூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மேட்டமலையில் உள்ள மீன் குடோன் அருகில் பணம் வைத்து சூதாடிய அதே கிராமத்தை சேர்ந்த கார்த்திகேயன் (வயது46), கருப்பசாமி (43), வனமுருகன் (45), செல்வம் (58) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து சீட்டுக்கட்டுகளையும், ரூ.1,240-யும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்