மோட்டார்சைக்கிளில் பதுங்கிய பாம்பு

ஸ்ரீவில்லிபுத்தூரில் மோட்டார்சைக்கிளில் பதுங்கிய பாம்பு பிடிபட்டது.

Update: 2021-07-03 18:56 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர், 
ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் வசித்து வருபவர் சரண்குமார். இவர் தனது வீட்டில் வழக்கம் போல் மோட்டார்சைக்கிளை நிறுத்தி இருந்தார். அப்போது பாம்பு ஒன்று மோட்டார்சைக்கிளின் சீட்டுக்கு அடியில் பதுங்கி இருந்தது. இதுகுறித்து அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு துறை அதிகாரி குருசாமி மற்றும் அந்தோணிக்கு  தகவல் கொடுத்தார். இதையடுத்து தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து பாம்பை பிடித்து வனப்பகுதியில் கொண்டுபோய் விட்டனர்.

மேலும் செய்திகள்