ஆர்ப்பாட்டம்

விருதுநகரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2021-07-03 19:03 GMT
விருதுநகர், 
விருதுநகர் பாத்திமா நகரில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளை செயலாளர் ஜெயா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை மாவட்ட தலைவர் உமா மகேஸ்வரி தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் தெய்வானை மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து பேசினார். இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்