மது கடத்திய வாலிபர் கைது
திருவேங்கடம் அருகே காரில் மது கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவேங்கடம்:
திருவேங்கடம் அருகே உள்ள சங்குபட்டி விலக்கு அருகே திருவேங்கடம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வேகமாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 26 மதுபாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சங்குபட்டி மெயின் ரோடு தெருவைச் சேர்ந்த ஹரி விக்னேஷ் (வயது 25) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.