தொழிலாளி தீக்குளித்து தற்கொலை

சிவகிரி அருகே தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-07-03 20:04 GMT
சிவகிரி:
சிவகிரி அருகே உள்ள விஸ்வநாதபேரி தர்மபுரி பகுதியைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன் (வயது 55). தொழிலாளியான இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. தினமும் மதுஅருந்திவிட்டு மனைவி மாரியம்மாளுடன் தகராறு செய்தார். இந்த நிலையில் சம்பவத்தன்றும் பரமேஸ்வரன் மது அருந்திவிட்டு, மனைவியுடன் தகராறு செய்தார். இதனால் மனவேதனை அடைந்த பரமேஸ்வரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து சிவகிரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் ெதரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து, உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்