சிறுமியிடம் சில்மிஷம்; போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
சங்கரன்கோவிலில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
சங்கரன்கோவில்:
வாசுதேவநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி மகன் மகேந்திரன் (வயது 35). இவர் ஒரு கிராமத்தை சேர்ந்த சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் உறவினர்கள் சங்கரன்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் மகேந்திரனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.