கோவில் பூசாரி கொலையில் மேலும் ஒருவர் கைது

சீவலப்பேரி கோவில் பூசாரி கொலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-07-05 19:30 GMT
நெல்லை:

நெல்லை அருகே உள்ள சீவலப்பேரி பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம் என்ற துரை (வயது 45). இவர் சீவலப்பேரி சுடலை மாடசுவாமி கோவிலில் பூசாரியாக பணியாற்றி வந்தார். இவர் கடந்த ஏப்ரல் மாதம் 18-ந்தேதி மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கைது செய்யும்படி உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் தனிப்படை அமைத்து ஏற்கனவே 16 பேரை கைது செய்தனர். சீவலப்பேரி பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 35) என்பவரை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் அவர் பாளையங்கோட்டை அருகே உள்ள மறுகால்தலை பகுதியில் தலைமறைவாக இருந்தது போலீசாருக்கு தெரியவந்தது. உடனே போலீசார் அங்கு சென்று சுப்பிரமணியனை கைது செய்தனர். இந்த வழக்கில் இதுவரை 17 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்