கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி
கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
தோகைமலை
தோகைமலையில் உள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு ெகாரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முகாமில் தோகைமலை சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள கர்ப்பிணிகள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு வட்டார மருத்துவர் தியாகராஜன் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் சளி, இருமல், காய்ச்சல், ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய் உள்ளவர்களுக்கு பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.