மேலும் 5 பேர் உயிரை பறித்த கொரோனா

தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 5 பேர் பலியாகினர்.

Update: 2021-07-07 16:18 GMT
தேனி: 

தேனி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 32 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 42 ஆயிரத்து 550 ஆக உயர்ந்தது. 

கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 48 பேர் நேற்று குணமாகினர். தற்போது 320 பேர் இந்த வைரஸ் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில் இந்த வைரஸ் பாதிப்புடன் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேனி, கம்பம் பகுதிகளை சேர்ந்த 5 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். 

அதன்படி, 80 வயது முதியவர், 52 வயது ஆண், 65 வயது மூதாட்டி, 45 வயது பெண், 72 வயது மூதாட்டி ஆகியோர் உயிரை கொரோனா பறித்தது. 



இதனால் மாவட்டத்தில் இந்த வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 503 ஆக உயர்ந்தது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழப்பு குறைந்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மீண்டும் அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகள்