பாலிடெக்னிக் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

வீரவநல்லூரில் பாலிடெக்னிக் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-07-07 19:07 GMT
சேரன்மாதேவி:

வீரவநல்லூர் பாரதி நகரை சேர்ந்தவர் ஆத்தி. இவரது மகன் வெங்கடேஷ் (வயது 19). இவர் ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் வெங்கடேஷ் தனது பெற்றோரிடம் செல்போன் வாங்கித்தருமாறு அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபடுவாராம். இதேபோல் நேற்று முன்தினம் இரவிலும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த வெங்கடேஷ் நேற்று அதிகாலை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த வீரவநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்