விஷம் குடித்த முதியவர் சாவு

விஷம் குடித்த முதியவர் உயிரிழந்தார்

Update: 2021-07-07 20:11 GMT
மீன்சுருட்டி
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள தென்னவநல்லூர் காலனி தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 61). இவர் சமீப நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் கடந்த மாதம் 29-ந் தேதி பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து அவரது உறவினர் சந்திரோதயம் கொடுத்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்