போலீஸ் விசாரணைக்கு பயந்து தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

வளவனூர் அருகே போலீஸ் விசாரணைக்கு பயந்து தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-07-08 10:34 GMT
வளவனூர்,

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே நரையூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி (வயது 40). தொழிலாளி. இவர் வளவனூரை சேர்ந்த உமா என்பவருக்கு வட்டிக்கு பணம் வசூலித்து கொடுக்கும் வேலையும் செய்து வந்தார்.

இந்த நிலையில் உமாவிடம் புதுச்சேரி மாநிலம் திருபுவனை கிராமத்தை சேர்ந்த இளங்கோ என்பவர் கடன் வாங்கி இருந்தார். அந்த கடனை அவர் திருப்பி செலுத்தவில்லை.

இந்த கடனை திருப்பி செலுத்துமாறு ரவியும், உமாவும் இளங்கோவை மிரட்டியதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த இளங்கோ தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்குப்பதிவு செய்து உமாவை கைது செய்தனர். இந்த நிலையில் தன்னை போலீசார் விசாரணைக்கு அழைத்து கைது செய்துவிடுவார்களோ என அச்சம் அடைந்த ரவி கோலினூரில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்