ராமநாதபுரம் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் கங்காதரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
கீழக்கரை துணை மின் நிலையத்தில் உள்ள காஞ்சிரங்குடி மின்பாதையில் பழைய மின்கம்பியை அகற்றி விட்டு புதிய பெரிய மின்கம்பி மாற்றுவதுடன் அவசரகால பராமரிப்பு பணி நடைபெறுவதால் காஞ்சிரங்குடி, கல்லாகுளம், செங்கல்நீரோடை, கோரைக்கூட்டம் பகுதி முழுவதும் இன்று(வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.