நொய்யல்
கரூர் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே வள்ளுவர்நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 45). இவரது வீட்டிற்குள் நேற்று நாகப்பாம்பு ஒன்று புகுந்து படம் எடுத்து ஆடியது. இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டிற்குள் புகுந்த பாம்பை பிடித்து சென்று வனப்பகுதியில் விட்டனர்.