முத்துமாலை அம்மன் கோவில் திருவிழா
முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவில் திருவிழா நடந்தது.
முக்கூடல்:
முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவில் திருவிழா கடந்த 4-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் 6-ம் நாளான நேற்று காலை மற்றும் மதியம் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கோவிலில் முத்துமாலை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மாலையில் தீர்த்தவாரி நடந்தது. இரவில் அமர்நாத் வளாகத்தில் அமைந்துள்ள அம்மன் உற்சவ சிலைக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடந்தது.
இதில் பக்தர்கள் பலர் சமூக இடைவெளி கடைபிடித்து கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விழாக் குழு தலைவர் வேல்சாமி, செயலாளர் சந்திரன், பொருளாளர் முத்தரசன், துணைத் தலைவர் மாரியப்பன் செய்து இருந்தனர்.