மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம்

தென்காசியில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-07-10 19:41 GMT
தென்காசி:

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தென்காசி தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய தொகுதி மாவட்ட விவசாய அணி செயலாளர் செல்லப்பா தலைமை தாங்கினார். 

இதில் மாவட்ட இளைஞரணி செயலாளர் கவுதம், வடக்கு மாவட்ட விவசாய அணி செயலாளர் முத்தையா, தொழிலாளர் அணி மாவட்ட செயலாளர் சாகுல் அமீது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்