காதில் விஷம் ஊற்றி முதியவர் தற்கொலை

காதில் விஷம் ஊற்றி முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-07-10 20:56 GMT
கீழப்பழுவூர்:

காதில் விஷம் ஊற்றினார்
அரியலூர் மாவட்டம் கீழகாங்கியனூர் கிராமத்தை சேர்ந்தவர் சொக்கலிங்கம்(வயது 66). இவருடைய மனைவி பானுமதி(56). இவர்களுக்கு திருமணமாகி 30 ஆண்டுகளுக்கு மேலாகிறது. ஆனால் இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை.
இதனால் தங்களை பராமரிக்க பிள்ளைகள் இல்லையே என்ற ஏக்கத்தில் இருந்த சொக்கலிங்கம், சம்பவத்தன்று அந்த கிராமத்தில் உள்ள கருப்புசாமி கோவில் அருகே, வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) காதில் ஊற்றி மயங்கிய நிலையில் கிடந்தார்.
சாவு
இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சொக்கலிங்கம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்