திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 21 பேருக்கு கொரோனா

திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 21 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

Update: 2021-07-11 15:56 GMT
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை 607 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் நேற்று உயிர் பலி எதுவும் இல்லை. அதே போல் பாதிப்பு எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துள்ளது. நேற்று 5 பெண்கள் உள்பட மேலும் 21 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 31 ஆயிரத்து 855 ஆக உயர்ந்தது. அதேநேரம் 21 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். நேற்றைய நிலவரப்படி 258 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் செய்திகள்