முதியவர் தற்கொலை

சிவகிரி அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-07-11 19:25 GMT
சிவகிரி:

சிவகிரி அருகே உள்ள ராயகிரி காந்தி தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 60). கூலித்தொழிலாளியான இவருக்கு கடன் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த சுப்பிரமணியன் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து தகவல் அறிந்த சிவகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சுப்பிரமணியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்