தொண்டி,
தொண்டி அருகே உள்ள நம்புதாளை இயேசுபுரம் கண்மாய் பகுதியில் பணம் வைத்து சூதாடி வருவதாக தொண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சித்தன் தலைமையில் போலீசார் அந்தபகுதியில் சோதனை நடத்தி தொண்டி புதுக்குடி அருண் (வயது23), தொண்டி தெற்கு தெரு அப்துல் காதர் (48), வடக்குத்தெரு பரக்கத் அலி (52), ஏ.மணக்குடி கவுதம் (31) ஆகிய 4 பேரை பிடித்து வழக்குப்பதிந்து கைது செய்தனர்.ரூ.41ஆயிரத்து 360 மற்றும் 5 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.