காரில் பெண் கடத்தல்; தந்தை போலீசில் புகார்

காரில் பெண் கடத்தல்; தந்தை போலீசில் புகார்

Update: 2021-07-12 17:09 GMT
கீரமங்கலம், ஜூலை.13-
கீரமங்கலம் அருகே உள்ள நெய்வத்தளி தெற்கு கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது மகள் சங்கவி (வயது 27). இவர் கடந்த சில வருடங்களாக திருப்பூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை இல்லாததால் 3 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துவிட்டார். இந்த நிலையில் குமார் தனது மகள் சங்கவிக்கு திருமண ஏற்பாடுகள் செய்து வந்தார். நேற்று காலை நெய்வத்தளி கிராமத்தில் குமார் வீடு அருகே ஒரு கார் வந்து நின்றது. அப்போது அந்த காரில் இருந்த சிலர் சங்கவியை ஏற்றிக்கொண்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து குமார் கீரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், எனது மகள் திருப்பூரில் வேலை செய்த போது, அதே நிறுவனத்தில் பணியாற்றிய திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்த பாபு என்பவரும்  பழகியுள்ளனர். இந்த நிலையில் பாபுவின் நண்பர்கள் எனது மகளை காரில் கடத்திச் சென்றுவிட்டனர். அவர்களிடம்  இருந்து எனது மகளை மீட்டுத்தர வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்