காங்கிரஸ் சார்பில் மாட்டுவண்டி ஊர்வலம்

காங்கிரஸ் சார்பில் மாட்டுவண்டி ஊர்வலம்

Update: 2021-07-12 19:44 GMT
விருதுநகர்
பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து விருதுநகரில் நகர காங்கிரஸ் சார்பில் மாட்டுவண்டி ஊர்வலம் நடைபெற்றது. இதில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜாசொக்கர், சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன், கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சிசுந்தரம், விருதுநகர் முன்னாள் நகரசபை துணை தலைவர் பாலகிருஷ்ணசாமி, சிவஞானபுரம் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி, நகர காங்கிரஸ் தலைவர் வெயிலு முத்து,  உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர். ஊர்வலம் விருதுநகர் நகராட்சி அலுவலகம் அருகில் இருந்து புறப்பட்டு மெயின் பஜார் வழியாக தேசபந்து திடல் அருகே முடிவடைந்தது.

மேலும் செய்திகள்