மணல் கடத்திய சரக்கு ஆட்டோ பறிமுதல்

மணல் கடத்திய சரக்கு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-07-12 22:43 GMT
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் பொலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் அம்பலவர் கட்டளை காந்தி நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை மறித்து சோதனை செய்து, விசாரித்தனர். இதில் சரக்கு ஆட்டோவில் மருதையாற்று படுகை பகுதிகளில் இருந்து வி.கைகாட்டி பகுதிக்கு மணல் கடத்தியது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து, சரக்கு ஆட்டோவை ஓட்டி வந்த டிரைவர் சுண்டக்குடி தெற்கு தெருவை சேர்ந்த மணிகண்டனை(வயது 34) கைது செய்தனர். மேலும் சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்