லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

மூங்கில்துறைப்பட்டில் லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2021-07-13 17:19 GMT
மூங்கில்துறைப்பட்டு

சத்தீஸ்கர் மாநிலம் பிட்டிங்பரா பகுதியை சேர்ந்தவர் ஷியாம்யாதவ் மகன் கிருஷ்ணா(வயது 23). போர்வெல் எந்திர லாரி டிரைவரான இவர் மூங்கில்துறைப்பட்டில் தங்கி இருந்து வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு உடன் வேலைபார்த்து வந்த தொழிலாளர்கள் அனைவரும் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றனர். அப்போது தனியாக இருந்த கிருஷ்ணா அதே பகுதியில் உள்ள வேப்பமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலைக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.இதுகுறித்து மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்