மணல் கடத்திய சரக்கு ஆட்டோ பறிமுதல்

மணல் கடத்திய சரக்கு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-07-13 18:34 GMT
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் முத்துவாஞ்சேரி பஸ் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை மறித்து சோதனை செய்ய முயன்றனர். ஆனால் டிரைவர் சாலையின் ஓரமாக சரக்கு ஆட்டோவை நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். இதையடுத்து சரக்கு ஆட்டோவை சோதனை செய்தபோது, அதில் முத்துவாஞ்சேரி கொள்ளிடம் ஆற்றுப்படுகை பகுதியில் இருந்து விக்கிரமங்கலம் பகுதிக்கு மணல் கடத்தியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்