33 மதுபாட்டில்கள் பறிமுதல்
விருதுநகர் அருகே 33 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விருதுநகர்,
விருதுநகர் அருகே பொம்மையாபுரம் ரோடு, ஆவுடையாபுரம் ரோடு மற்றும் எத்திலப்பன் பட்டி ரோடு ஆகிய பகுதிகளில் வச்சக்காரப்பட்டி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதிகளில் கோட்டூரை சேர்ந்த முனியராஜ் (வயது 45), திருத்தங்கல்லை சேர்ந்த முனியசாமி (54), தம்மநாயக்கன்பட்டியை சேர்ந்த ராஜா (54) ஆகிய 3 பேரும் மதுபாட்டில்களை வைத்துக்கொண்டு நின்று கொண்டு இருந்த நிலையில் அவர்களிடமிருந்து 33 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.