இளைஞர் பெருமன்றத்தினர் நூதன போராட்டம்

இளைஞர் பெருமன்றத்தினர் நூதன போராட்டம் நடத்தினர்.

Update: 2021-07-14 16:46 GMT
காரைக்குடி,ஜூலை.
காரைக்குடி ஐந்துவிளக்கு அருகே அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் தமிழகத்திற்கான கொரோனா தடுப்பூசிகளை உடனே வழங்க மத்திய அரசை வலியுறுத்தி தலையில் கட்டுகளுடன் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சிவாஜி காந்தி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் குமரேசன், நகர செயலாளர் ரிச்சர்ட், கல்லல் ஒன்றிய செயலாளர் பாண்டி, லில்லி தெரசா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் சிவாஜி காந்தி உள்ளிட்ட 15 பேர் மீது காரைக்குடி வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் செய்திகள்