தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-07-14 19:30 GMT
தோகைமலை
தோகைமலை காவல் சரகத்திற்கு உட்பட்ட சின்னியம்பாளையம் ஊராட்சி காக்காயன்பட்டி காலனியை சேர்ந்தவர் வீரமலை (வயது 35). கட்டிட கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். ஊரடங்கு காரணமாக வேலையில்லாததால் குடும்பம் நடத்த பணம் இல்லாமல் வறுமையில் தவித்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட வீரமலை நேற்று முன்தினம் வீட்டில் அரளி விதையை அரைத்து குடித்து மயங்கி விழுந்தார். இதையடுத்து வீரமலையின் மனைவி கவுரி அவரை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி வீரமலை பரிதாபமாக இறந்தார். இந்த தற்கொலை குறித்து தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

மேலும் செய்திகள்