கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி

கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

Update: 2021-07-15 17:22 GMT
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி அருகே பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் நபீஷா பானு தலைமையில் இந்த முகாம் தொடங்கப்பட்டது. இதில் சுமார் 30-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் தடுப்பூசி போடப்பட்டதால் அவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுகிறதா என மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்தனர்.

மேலும் செய்திகள்