கடன் தொல்லையால் வியாபாரி தற்கொலை

தூத்துக்குடியில் கடன் தொல்லையால் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-07-16 17:09 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி நிகிலேசன் நகரைச் சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 50). இவர் தூத்துக்குடி தெற்கு சம்பந்தமூர்த்தி தெருவில் மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடையில் இருந்த ரங்கநாதன் நேற்று மதியம் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்த தகவலின் பேரில் தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். ரங்கநாதனின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
கடந்த சில மாதங்களாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் பலரிடம் கடன் வாங்கிய ரங்கநாதன் அதை திருப்பி செலுத்த முடியாததால் தற்கொலை செய்திருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்