வெள்ளி கவசத்தில் சித்தர் முத்துவடுகநாதர்

சிங்கம்புணரியில் ஆனி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி முத்துவடுகநாதர் கோவிலில் சிறப்பு பூைஜ நடந்தது.

Update: 2021-07-16 18:15 GMT
சிங்கம்புணரி,

சிங்கம்புணரி வேங்கைபட்டி சாலையில் உள்ள சித்தர் முத்துவடுகநாதர் கோவிலில் ஆனி மாத கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி சாமிக்கு பால், பன்னீர், பழ வகைகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதை தொடர்ந்து புதிய பட்டாடை சாத்தி பல வண்ண மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டன. வெள்ளி கவச அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்