மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் சாவு

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-07-16 18:27 GMT
நொய்யல்
மண்மங்கலம் அருகே உள்ள பண்டுதகாரன்புதூர் செல்வம் நகரை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 56). இவர் தளவாப்பாளையம் கடைவீதிக்கு டீ குடிப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளில் வந்தார். பின்னர் டீ குடித்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு அதே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி வெங்கடாசலம் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
 இதையடுத்து கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்